தமிழகம்

வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக இந்திய வானிலை மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக இந்திய வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று (19-01-2026) விலகியது. இதன் காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 22-01-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 23-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button