தமிழகம்
புஸ்ஸி ஆனந்த்தை எச்சரித்த பெண் போலீஸ்..

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்தப் பொதுக் கூட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கரூரில் 40 பேர் இறந்ததை மனதில் வைத்து செயல்படும்படி தவெகவினருக்கு காவல் அதிகாரி ஈஷா சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்குமாறு கேட்ட தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்துக்கு போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என ஆனந்த் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




