தமிழகம்
தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 21 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினர் ஒருபுறம், கடற்கொள்ளையர்கள் மறுபுறம் என தினந்தோறும் தொல்லை கொடுப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து அங்கு மூன்றாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது.



