தமிழகம்

விஜய் வீடு முற்றுகை; கூடுதல் பாதுகாப்பு..

கரூரில் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த விவகாரத்தை தொடர்ந்து, அவரது சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு சென்னை போலீசார் மற்றும் 12 சிஆர்பிஎப் வீரர்களுடன் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் இந்த துயர சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக திருச்சி சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவோடு இரவாக சென்னைக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அடையார் துணை கமிஷனர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டிற்கு செல்லும் சாலையின் இடையே இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நடிகர் விஜய் வீட்டின் அருகே தவெக தொண்டர்கள் குவிந்தனர். இதனால் கூடுதலாக 12 சிஆர்பிஎப் வீரர்கள் அவரது வீட்டின் முன்பு பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். நடிகர் விஜய் வீட்டின் அருகே போலீசார் யாரையும் விடவில்லை.

விஜய்யை கைது செய்ய கோரி நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை தமிழ் மாணவர் மன்றத்தை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிறிது தொலைவில் தமிழ் மாணவர் மன்றத்தை சேர்ந்தவர்கள், நடிகர் விஜய்க்கு எதிராக கோஷம் எழுப்பினர். உடனே போலீசார்அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button