தமிழகம்
பட்டுக்கோட்டையின் மனிதநேயம் மறைந்தது….

தஞ்சாவூர் மாவட்டம் ,பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் Dr.ரத்தினம் பிள்ளை. பட்டுக்கோட்டை பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவம் பார்த்து பத்து ரூபாய் மருத்துவர் என்று அழைக்கப்படும் Dr. ரத்தினம் பிள்ளை(96) இன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு 10 ரூபாய் கட்டணமாக பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்துள்ளார். மக்களுக்கு சிறந்த மருத்துவம் பார்க்க வேண்டும் என்று மனிதநேயத்துடன் செயல்பட்டார். கொரோனா லாக் டவுனில் தனக்கு சொந்தமான காம்ப்ளக்ஸில் கடை வைத்தவர்களிடம் வாடகையே வேண்டாம் என பல லட்சங்களை விட்டுக் கொடுத்த உன்னத மனிதர். சுமார் 65 ஆயிரம் சுகப்பிரசவங்கள் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.