இந்தியா
இந்திய வீரர் உட்பட 4 பேர் நாளை விண்வெளிக்குப் பயணம்!
- அமெரிக்காவில் செயல்படும் ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ்,
- இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 பேர் நாளை மதியம் இந்திய நேரப்படி 12:10 மணிக்கு விண்வெளிக்குச் செல்ல உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
- முன்னதாக 6 முறை ஒத்திவைக்கப்பட்ட இப்பயணம் நாளை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
- மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்” திட்டத்திற்குத் தேர்வானவர்களில் சுபான்ஷூ சுக்லாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது