தமிழகம்

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்

 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்; தமிழ்நாட்டில் மார்ச் 11ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. மார்ச் 11 ல் தொடங்கி ஏப். 6 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மே 20 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது.

மார்ச் 2ல் தொடங்கி மார்ச் 26 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகிறது. தேதி அறிவித்ததால் மாணவர்கள் பதற்றமடைய தேவையில்லை; உற்சாகத்துடன் தேர்வுக்கு தயாராகுங்கள். மாணவர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கால்குலேட்டர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button