தமிழகம்
தஞ்சை வந்தடைந்த பேரிடர் மீட்பு குழு..

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் கொண்ட குழுவினர் சென்னையிலிருந்து தஞ்சை வந்தடைந்தனர். இதில் சார்பு ஆய்வாளர் அனுசுயா தலைமையில் உள்ள குழுவினர் உள்ளனர்.




