தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்..

தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி தஞ்சை கோட்டாட்சியர் நித்யா தெரிவித்துள்ளார்.




