தமிழகம்
தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் கண்ணீருடன் அஞ்சலி..

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக பொதுக்குழு கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. பொதுக்குழு தொடங்கியவுடன் கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செய்தார். இதன் பின் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு விஜய் உள்ளிட்ட அனைத்து தவெக நிர்வாகிகளும் கண்ணீருடன் மௌன அஞ்சலி செலுத்தினர்.

பிறகு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானத்தை கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் வாசித்தார்.




