தமிழகம்
தெருநாய் வழக்கு: தலைமை செயலாளர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தெருநாய்கள் விவகாரத்தில் தமிழக தலைமைச் செயலாளர் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது என்றும்,கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தும், இதுவரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தெருநாய் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகிய 3 மாநிலங்களைத்தவிர பிற மாநில தலைமைச்செயலாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி..




