தமிழகம்
தமிழகத்தில் அதிகரித்த டெங்கு காய்ச்சல்- மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் டெங்கு ஒழிப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கொசு உற்பத்தியை தடுக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல்15,796 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் எட்டு பேர் பலியானதாகவும் அவர் கூறியுள்ளார்.