தமிழகம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 47 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரேநாள் இரவில் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்கள் இன்று காலை கைது செய்தனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஆண்டாண்டு காலமாக தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் நேற்று மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.அவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்களின் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மீனவர்கள் 30 பேரும் அவர்களின் படகுகளுடன் இன்று காலை மன்னார் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button